Wednesday 26 April 2017

Mullivaikkal Genocide 8th Year Remembrance-இன அழிப்பின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்


8ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் - பிரித்தானியா.

நாள்-18.05.2017 வியாழக்கிழமை
இடம்-Hide park,London W2 2UH
தொடங்கும் நேரம்-17:00

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்தத்தின்போது காணாமல் போன, விசாரணைக்கென்று அழைத்துச்செல்லப்பட்ட 18,000 க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்களும் இறந்திருக்கலாம் அல்லது வெளி நாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என்கின்றது இனவழிப்பு செய்த சிறிலங்கா தேசத்தின் ரணில், மைத்திரி அரசாங்கம்.
 
சர்வதேச நியமங்களுக்கும் சட்டத்திற்கும் மாறாக இடம் பெற்ற அநீதிகளை சர்வதேசம் கண்டு கொள்ளாது நழுவிச் செல்லாமல் இருக்க வேண்டுமானால் ஒன்று பட்ட எம் எழுச்சியுடனான அழுத்தம் உச்சமாக இருக்க வேண்டும்.

எங்கள்  மண்ணின் விடுதலைக்காகவும், இறுதிப்போரில் வதைக்கப்பட்ட, கொல்லப்பட்ட
எங்கள்  உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று அணிதிரளுமாறு பிரித்தானியா தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.  

"தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்.
நீதி கிடைக்கும்வரை அயராது செயல்படுவோம்! 
சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவோம்!"