Monday 3 October 2016

இலங்கையின் பூர்விக குடிகள் தமிழர்களே !

01.உலக மொழிகளில் ஆதிமொழி தமிழ் .இதை ஆங்கிலேயர்களே ஆராட்சி மூலம் நிறுவியும் ஏற்றும் கொண்டுள்ளனர்.

02. சிங்களவரின் தமது வரலாற்றை மகாவம்சத்தை வைத்தே நிறுவுகின்றனர் .இது மகாநாம தேரர் என்னும் பௌத்த பிக்குவினால் அதுவும் பாளி மொழியில் கி.பி. 5 ம் நூற்றாண்டில் எழுதினார் .இதில் உண்மைகள் கற்பனைகளுக்கு மேலே தூவப்பட்டிருக்கின்றன .

03.மகாவம்சத்தின்படி படி கி.மு.543 இல் இன்றைய பெங்கார் ,ஒடிஷா மாநில பகுதிகளிலிருந்து ஒரு சிறிய நாட்டின் அடங்காத கடடாக்காலி இளவரசனை அவனது தந்தை 700 நண்பர்களுடன் சேர்த்து நாடு கடத்தினார் .

04.அந்த பாய்மரக்கப்பல் நாகதீப என்றழைக்கப்படும் இன்றைய இலங்கையை வந்தடைந்தது .-மகாவம்சம்

05.அந்த இளைஞன் விஜயன் ,குவேனி என்னும் நாக இளவரசியை மணந்தாள் -இவர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள்

மகாவம்சம் மறைக்க முற்பட்டு முடியாமல் போன தமிழர் கதை ……………

01.மஹாவம்சப்படி …….வியஜன் இலங்கைக்கு வந்த பொது மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்கள் யார் ?
* பழந்தமிழ் பேசிய திராவிடர்கள் .

02.இயக்கர் நாகர் வேடர் என மூன்றின மக்கள் விஜயனுக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்கள் திராவிடர்கள் .அவர்கள் பேசிய மொழி என்ன ?
* அவர்கள் ஒருவகை பழந்தமிழை பேசினார்கள் .

03.1956 ம் ஆண்டு விஜயன் இலங்கையில் கால் பதித்த2000 ம் ஆண்டை நினைவு கூற இலங்கை ஒரு தபால் தலையை வெளியிட்ட்து .பின்னர் அது உடனே திரும்பப்பெறப்படாது ஏன் ?
*தமது மூதாதையன் என கொண்டாடும் வியஜன் இலங்கையின் பூர்விக குடிமகன் இல்லை என்பதால் …அந்த முத்திரை வெளியீடு அதை தாமே ஒப்புக்கொள்ளவைத்தாய் இருக்கும் என்பதால்…

இன்னும் தெளிவாக அறிய ……இந்த வீடியோவை கேளுங்கள்