Wednesday 17 September 2014

UN விசாரணையில் சாட்சியமளிப்பது எப்படி

ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் சாட்சியமளிப்பது எப்படி?
********************************************************************

UN மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் நடாத்தப்படும் விசாரணையில் எவ்வாறு சாட்சியமளிக்கலாம் என்பது தொடர்பாக பத்திரிக்கை மற்றும் இணையத்தில் வெளியான தகவல்களைத் தொகுத்து உங்களுக்கு வழங்குகின்றோம்.
 
அ. எப்போது இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்கலாம்?:

மூன்று வகையான சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிகாலம்:

1. இறுதி யுத்தத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்கள் :- ஐ. நா விசாரணை குழு உத்தியோகபூர்வமாக 2001 காலப் பகுதியின் பின்னரான விடயங்களையே கவனத்தில் எடுக்கும். என்றாலும் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவும் எந்த சம்பவத்தைப் பற்றிய தகவலும் தமக்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் 1948க்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கலாம் .

2. இறுதி யுத்தத்திற்குப் பின்னரான சம்பவங்கள்- ஐ நா விசாரணை உத்தியோகபூர்வமாக 2012 காலப் பகுதியின் முன்னரான விடயங்களே கவனத்தில் எடுக்கும் என்றாலும் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவும் எந்த சம்பவத்தைப் பற்றிய தகவலும் தமக்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்குத் தடையில்லை.

3. இறுதி யுத்தத்தின் போதான சம்பவங்கள்

அ. எத்தகைய சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கலாம்?: இனப் பிரச்சனை தொடர்பிலான எந்த வன்முறைச் சம்பவம் தொடர்பிலும் சாட்சியமளிக்கலாம். உதாரணமாக: கொலை, கடத்தல், காணாமல் போதல், காணாமல் போகச் செய்தல், பாலியல் வன்கொடுமை, காணி அபகரிப்பு, சித்திரவதைக்குட்படுத்தப்படல், அரசியல் கைதிகள், தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள்.

ஆ. உங்கள் சாட்சியம் பின்வரும் விடயங்களை கவனித்தில் கொள்ள வேண்டும்:
சாட்சியம் தருபவர் தொடர்பான விடயங்கள் (பெயர், வயது, முகவரி)
சம்பவம் நடந்த இடம்:
சம்பவம் நடந்த திகதி:
சம்பவம் பற்றிய முழுமையான விபரிப்பு:

சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதைப் பற்றி இயன்ற வரையில் முழுமையான விபரணம்: (உதாரணமாக ஷெல் தாக்குதலால் மரணமடைந்திருந்தால் எந்தத் திசையிலிருந்து அந்த ஷெல் தாக்குதல் நடந்தது – அந்தத் திசையில் யார் நிலை கொண்டிருந்தனர் போன்ற தகவல்கள், காணாமல் போனோர் தொடர்பில் – எந்த முகாமைச் சேர்ந்தவர்கள் கடத்திக் கொண்டு போனார்கள் போன்ற விபரங்கள்).

இ. எந்த மொழியில் சாட்சியம் அளிக்கலாம்?

சாட்சியங்கள் தமிழிலும் வழங்கலாம் . ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லை.சுயமாகத் தாயரித்து அனுப்பலாம். இதற்கென்றொரு படிவம் இல்லை. கடிதமாக கூட மேற்குறிப்பிட்ட விபரங்களை உள்ளடக்கி எழுதி அனுப்பலாம்.


ஈ. சாட்சியத்தை எங்கு அனுப்புவது:

மின்னஞ்சல் மூலமாக அனுப்புவதாயின் oisl_submissions@ohchr.org என்ற முகவரிக்கோ அல்லது OISL, UNOG-OHCHR, 8-14 Rue de la Paix, CH-1211 Geneva 10, Switzerland என்ற தபால் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம். சாட்சியமளிப்பதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை தமிழ் பத்திரிகைகளில் பார்வையிட முடியும். அவ்வாறான ஒரு படிவத்தினை நீங்களாகவே தயாரிக்க முடியும் அல்லது தமிழ் செய்தி இணையத்தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.


எ. சாட்சியமளிப்பதற்கான இறுதித் திகதி: 30 அக்டோபர் 2014

சிங்கள அரசினால் தமிழ் மக்களாகிய எமக்கு இடம்பெற்ற, இடம்பெற்றுவரும் அநீதிகளை விசாரணைக் குழுவுக்கு முழுமையாக சமர்ப்பிப்பதன் மூலம் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் நீதி பெற்றுக் கொள்வதற்கு கிடைத்துள்ள இச் சந்தற்பத்தை அனைத்து தமிழ் மக்களும் தவறவிடாது முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீங்கள் மேலும் உதவி தேவை என்றால் எம்மை தொடர்புகொள்ளவும் jeya1973@yahoo.com , அல்லது tnpfparty@gmail.com ஊடாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி அலுவலகத்தை நாடலாம்.

தொலைபேசி இலக்கம் :- 0212223739, 0773024316, 0777301021