Sunday 13 November 2016

பெண் பொலிசார் ஒருவரை கலைத்துக் கலைத்து தாக்க முற்படும் விகாராதிபதி

மட்டக்களப்பில் நடு வீதியில் வைத்து கிராம சேவையாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரை கடும் போக்கான வார்த்தைகளையும் பிரயோகித்து தகாத வார்த்தைகளால் திட்டிய மங்களராமய விகாராதிபதி அண்மையில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிசார் பலர் முன்னிலையில் பெண் பொலிசார் ஒருவரை கலைத்துக் கலைத்து தாக்க முற்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இன்றைய தினமும் பிக்கு விகாராதிபதியாக உள்ள விகாரைக்கு விசாரணை நடத்தச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது அவதூறான வார்த்தைகளையும் கூறி திட்டியதோடு அவரை தாக்க முயன்றார்.

இங்கு அவரை தடுக்க பொலிஸார் தமது அதிகாரத்தை பிரயோகிக்கவோ, அல்லது முறையான கட்டுப்படுத்தலையோ மேற்கொள்ளவில்லை, ஏனெனில் அவர் ஒரு சிங்கள மதகுரு. பொலிஸ்அதிகாரங்கள்,நீதிமன்ற கட்டளைகள் ,சட்டங்கள் அப்பாவி தமிழரை நோக்கி பல மடங்கு வீரியத்துடன் பாயும் அனால் பெரும்பான்மை இனத்தவரை அல்ல.


11ம் திகதி சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை மிக்க கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தமிழர்கள் அனைவரையும் கடுமையாக எச்சரித்து திட்டிய வார்த்தைகள்.